4 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல்

தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில், உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட, 4 லட்சம் ரூபாயை பணத்தை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-03-01 16:00 GMT

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டியில் தேர்தல் பறக்கும்படை தாசில்தார் செல்வராணி தலைமையில் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தபோது, அந்த காரில் மயிலாடுதுறை ராஜேஸ்வரி நகரை சேர்ந்த குமார் 43, என்பவரிடம் 4 லட்சம் ரூபாய் பணம் இருந்தது. அவர் திருச்சியிலிருந்து மயிலாடுதுறை செல்கிறார் என்று தெரிய வந்தது.

அவரிடம் இருந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்தனர். தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மஞ்சுளா முன்னிலையில், 4 லட்சம் ரூபாய் பணத்தை திருவையாறு சார் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Similar News