தஞ்சாவூர் மாவட்டத்தில் 191 பேருக்கு இன்று கொரோனா தொற்று
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக 191 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.;
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 9,16,226 நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, 65,747 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 63,108 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 1,823 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,109 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 191 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 95 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.