இலவச குடி மனை பட்டா வழங்க கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பாபநாசம் தாலுகாவில் வீடற்ற அனைவருக்கும் இலவச குடி மனை பட்டா வழங்க கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்;
இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாய தொழிலாளர்கள்.
பாபநாசம் தாலுக்காவில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வீடற்ற அனைவருக்கும் இலவச குடி மனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பாபநாசம் ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் மதியழகன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வி, முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளர் பரமசிவம், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கனகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக பாபநாசம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று தாலுகா அலுவலகத்தை அடைந்தனர். பின்னர் போராட்ட குழுவினர் பாபநாசம் வட்டாட்சியர் முருகவேல் இடம் 100 விவசாய தொழிலாளர்களுக்கு குடிமனை பட்டா வழங்கக் கோரி 100 மனுக்களை வழங்கினார்கள்.