பாபநாசத்தில் கடந்த ஆறு நாட்களில் 267 பேருக்கு கொரோனா

பாபநாசத்தில் கடந்த ஆறு நாட்களில் 267 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.,

Update: 2021-05-06 14:45 GMT

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 27,556 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 25,117 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது 2,116 நபர்கள் கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தஞ்சாவூர்  மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாபநாசம் தாலுக்காவில் மட்டும் கடந்த ஆறு நாட்களில் 267 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News