ஒரத்தநாடு அருகே ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

படிக்கட்டில் அமர்ந்து குளித்து கொண்டு இருந்த போது, திடீரென தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டார்

Update: 2021-10-22 05:30 GMT

பைல் படம்.

ஒரத்தநாடு அருகே ஆற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள முதலிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (42). கூலி தொழிலாளியான இவர் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள  கல்லணை கால்வாய் ஆற்றுப்பாலம் அருகே உள்ள படிக்கட்டில் அமர்ந்து குளித்து கொண்டு இருந்த போது, திடீரென தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அப்போது அருகில் இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து, ஒரத்தநாடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சங்கரின் சடலத்தை உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News