தஞ்சாவூர் மாவட்டத்தில் மின் பகிர்மான நிலையங்களில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மின்பகிர்மான நிலையங்களில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார்.

Update: 2021-10-16 05:00 GMT

தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் உள்ள மின்பகிர்மான நிலையங்களை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார்.

இன்று விண்ணப்பித்தால், நாளை மின்னிணைப்பு வழங்கப்படும். கடந்த ஆட்சி காலத்தில் 1,800 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் சிறந்த பராமரிப்பு பணிகள் மூலம் தற்போது 3,500 திறன் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தஞ்சையில் பேட்டி.

தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுக்குடி, செங்கிப்பட்டி, வல்லம், அற்புதம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின்பகிர்மான நிலையங்களை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதலமைச்சரின் தொலை நோக்கு பார்வையின்பது, தமிழகத்திற்கு வரக்கூடிய தொழிற்சாலைகள் இன்று விண்ணப்பித்தால், நாளை மின் இணைப்பு வழங்கப்படும் என்ற அளவிற்கு மின்சார துறையின் கட்டமைப்பு உள்ளதாகவும், ஒரு நாளைக்கு 56,000 டன் முதல் 60,000 டன் வரை நிலக்கரி தேவை என்பது உள்ளது. இருப்பினும் நம்மிடம் நான்கு நாட்களுக்கு தேவையான கையிருப்பு உள்ளது.

எனவே தற்போது நிலக்கரி தொடர்பான பிரச்சினைகள் இல்லை என்றார். தமிழகத்தின் தேவையான மின்உற்பத்தி உள்ளதாகவும், நாளொன்றுக்கு 4,320 திறன் தேவை இருப்பதாகவும், ஆனால் கடந்த ஆட்சி காலத்தில், ஒரு நாளைக்கு 1,800 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது, ஆனால் தற்போது 3,500 மெகவாட் திறன் அதிகரித்து உள்ளது. இதற்கு காரணம் பராமரிப்பு சிறப்பாக செய்யப்படுவதே, மற்ற மாநிலங்களில் பற்றாக்குறை இருக்காலம்.

அதனால் தமிழகத்தில் அந்த நிலை வரும் என்று யோசிக்க வேண்டாம். தமிழகத்தைப் பொறுத்தவரை அனைவருக்கும் சமமான சீரான மின் விநியோகம் வழங்கப்படுவதே அரசின் நோக்கமாகும். விளைநிலங்களில் மின்கம்பி அறுந்து விழுந்து உயிர் இழப்புகள் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு மின்சார வாரியம் கட்டமைப்பை வலுப்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News