தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் 1880 கிலோ குட்கா, பான்மசாலா பறிமுதல் - 3 பேர் கைது
மேலவஸ்தாசாவடியில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா 1,880 கிலோ பறிமுதல். மூன்று பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்தனர்.;
தஞ்சாவூர் அடுத்த மேலவஸ்தாசாவடியில், தஞ்சாவூர் - புதுக்கோட்டை சாலையில், வல்லம் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக வந்த மினிலோடு வேனை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வேனில் மூட்டை மூட்டையாக குட்கா,பான்மசாலா உள்ளிட்ட பொருள்கள் இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து 1,880 கிலோ எடையுள்ள குட்கா, பான்மசாலாவை வேனையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பொருள்களை கடத்தி வந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பிரபு, சூர்யகுமார் மற்றும் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த அருண்குமார் ஆகிய மூன்று பேரை, தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.