சுவாமிமலை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

சுவாமிமலை அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

Update: 2021-12-03 13:15 GMT

சுவாமிமலை அருகே  கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வாலிபர்.

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா, உத்தரவின் பேரில் கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் மேற்பார்வையில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் சுவாமிமலை போலீசார் சுவாமிமலை காவல் சரக பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த சுவாமிமலை சரவணப்பொய்கை தெருவில் வசித்துவரும் நாகராஜன் மகன் வினோத் குமார் (30), என்பவரை சோதனை செய்ததில் அவரிடம் 500 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்தும், அவரை கைது செய்தும், வழக்குப்பதிவு செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News