மளிகை கடையில் பூட்டை உடைத்து திருட்டு: சிசிடிவி காட்சி மூலம் போலீஸார் விசாரணை

முகம் தெரியாதவாறு ஹெல்மெட் போட்ட நபர் கடைக்குள் புகுந்து பணப்பெட்டியில் இருந்து பணத்தை திருடும் காட்சி பதிவாகியுள்ளது

Update: 2021-10-06 04:30 GMT

கும்பகோணம் அருகே உள்ள மளிகைக்கடையில் உள்ளே புகுந்து திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிப்பதிவு

மளிகை கடையில் பூட்டை உடைத்து 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் திருட்டு. பணத்தை திருடும் சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் பிரதான சாலையில் அசோக் என்பவர் அரிசி மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார். இன்று காலை சற்று காலதாமதமாக கடையை திறக்க சென்றபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதுடன், ஷட்டர் சரியாக மூடப்படாத நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அசோக், உள்ளே சென்று பார்த்தபோது பணப் பெட்டியில் வைத்திருந்த 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்க்கும் பொழுது,  அதிகாலை 2.30 மணியிலிருந்து 2. 45 மணிக்குள்40 வயது மதிக்கத்தக்க நபர் முகம் தெரியாதவாறு ஹெல்மெட் போட்டுக்கொண்டு  ஷட்டரை உடைத்து  கடைக்குள் புகுந்து பணப்பெட்டியில் இருந்து பணத்தை திருடும் காட்சி பதிவாகியுள்ளது.

இக் காட்சியைக் கொண்டு நாச்சியார்கோவில் காவல்நிலையத்தார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடைக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கடையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.மேலும் நாச்சியார்கோவில் பகுதிகளில் சமீபகாலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்கதையாகி உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News