காவிரி ஆற்றில் மிதந்து வந்த பெண் சடலம்

காவிரி ஆற்றில் மிதந்து வந்த பெண் சடலம், இவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2021-12-18 17:30 GMT

கும்பகோணம் காவிரி ஆற்றில் மிதந்து வந்த பெண் சடலம்.

கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள காவிரி ஆற்றில் பெண் சடலம் மிதப்பதாக கும்பகோணம் கிழக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் கிழக்கு காவல்துறை ஆய்வாளர் அழகேசன் தலைமையில் காவல்துறையினர் காவிரி ஆற்றங்கரைக்கு சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கும்பகோணம் உப்புகார தெருவை சேர்ந்த தங்கராசு மனைவி பானுமதி (65) என்று அடையாளம் காணப்பட்டது.

Tags:    

Similar News