தனது மரணத்துக்கு தலைமை ஆசிரியர் தான் காரணம்: வீடியோ வெளியிட்டு மாணவர் தற்கொலை

தொடர்ந்து வகுப்புக்கு வந்த மாணவர் விஷாலை தலைமையாசிரியர் விடாமல் திட்டி, அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது

Update: 2021-11-01 10:00 GMT

தனது சாவுக்கு பள்ளி தலைமையாசிரியர்தான் காரணம் என வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவர் விஷால்

தனது மரணத்திற்கு தலைமை ஆசிரியர் தான் காரணம் என பதினொராம் வகுப்பு மாணவன் வீடியோ வெளியிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் காமராஜ் நகரை சேர்ந்த கட்டிடத்தொழிலாளி  லோகநாதன்- நிதா தம்பதியருக்கு  இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இரண்டாவது மகனான விஷால் (16). திருநாகேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொராம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது, பள்ளி விடுதியில் படிக்கும் அவரது நண்பர்களுக்கு வழங்கப்பட்ட உணவு தரமிவில்லை என, பள்ளி தலைமை ஆசிரியர் சம்பந்தகுமாரிடம் முறையிட்டுள்ளார். அதற்கு சம்பத்குமார், விஷாலை திட்டியதாக கூறப்படுகிறது, இதற்கு பிறகு ஒரு வருடமாக தொடர்ந்து வகுப்புக்கு வந்த மாணவர் விஷாலை, தலைமையாசிரியர் விடாமல் திட்டி, அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி வகுப்பிற்கு வந்த விஷாலை ஏன் முடிவெட்டவில்லை என கூறி சக மாணவர்கள் மத்தியில் கண்டித்ததாக கூறுப்படுகிறது. இதனால் மனமுடைந்த விஷால், கடந்த 25ஆம் தேதி, எலி பேஸ்டை தின்று தற்கொலைக்கு முயன்றார். மேலும். தனது  மரணத்திற்கு காரணம் ஆசிரியர் தான் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த  பெற்றோர்,  விஷாலை திருநாகேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்,

பின்னர் 26ஆம் தேதி கும்பகோணம் அரசு மருத்துவமனையிலும், 27ஆம் தேதி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர்  விஷால் சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு இறந்தார். விஷாலின் மரணத்துக்கு காரணமான தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags:    

Similar News