பொங்கல் பண்டிகைக்காக நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகைக்காக நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

Update: 2022-01-10 17:15 GMT

பொங்கல் சிறப்பு பஸ் ( பைல் படம்)

பொங்கல் பண்டிகைக்காக 11ம் தேதி முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன என தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற 14-ந் தேதி பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமமும் இன்றி பயணம் செய்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டலம் சார்பில் சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகை, காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு 11ம் தேதி முதல் வருகிற 13-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

அதேபோல் திருச்சியில் இருந்து தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் நாளை முதல் 13-ந் தேதி வரை அனைத்து முக்கிய நகரங்களில் இருந்து பஸ்களை இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சேவையை மக்கள் முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

மேலும் சென்னையில் இருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு வழித்தட பஸ்கள் தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.

கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகை, வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் வழித்தட பஸ்கள் கோயம்பேடு எம்.ஜி.ஆர் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது.

பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல வருகிற 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவவாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News