ஜி.கே.மூப்பனாரின் நினைவு நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தமாகா தொழிற்சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் 500 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், வேஷ்டி, புடவைகள் வழங்கப்பட்டது

Update: 2021-08-30 10:55 GMT

கும்பகோணத்தில் தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் நினைவு நாளை ஒட்டி நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 

கும்பகோணத்தில் தமாகா நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் நினைவு நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

கும்பகோணம் நகர தமாகா சார்பில், ஜி.கே.மூப்பனாரின் 20ம் ஆண்டு நினைவு நாளையொட்டி, உச்சிப்பிள்ளையார் கோவில் எதிரே உள்ள அவரது உருவச்சிலைக்கு, நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். பின்னர், தமாகா தொழிற்சங்க அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாநில செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சுதாகர் மூப்பனார் பங்கேற்று,  500 பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், வேட்டி, புடவைகள் வழங்கினார். மாநில செயலாளர் சாதிக்அலி, முன்னாள் எம்எல்ஏ- ராஜாங்கம், மாவட்ட துணைத் தலைவர் சிவா, வட்டார தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, செல்வராஜ், தொழிற்சங்க பொருளாளர் ரவிச்சந்திரன், இளைஞரணி மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீராம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நகர துணைத் தலைவர் மோகன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News