சுவாமிமலை பகுதியில் நாளை மின் வினியாேகம் நிறுத்தம்

சுவாமிமலை பகுதியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (30.12.2021) மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-29 14:15 GMT
பைல் படம்

மின்சாரத்துறை கும்பகோணம் உதவி செயற்பொறியாளர் மகாலிங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

திருபுறம்பியம் 110/11 கி.வோ.துணை மின் நிலையத்தில் பராமரிப்பு வேலைகள் 30ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்புறம்பியம், கொத்தங்குடி, வாளபுரம், மேலாத்துக்குறிச்சி, நீலத்தநல்லூர், இணைபிரியாள் வட்டம், காவற்கூடம், உத்திரை, முத்தையாபுரம், கடிச்சம்பாடி, கல்லூர், அகராத்தூர், தேவனாஞ்சேரி, சத்தியமங்கலம், கொந்தகை, திருவைகாவூர், அண்டக்குடி, பட்டவர்த்தி, ஆதனூர், சுவாமிமலை, திம்மகுடி, மாங்குடி, புளியம்பாடி, இன்னம்பூர், மருத்துவக்குடி, நாகக்குடி, புளியஞ்சேரி, பாபுராஜபுரம், ஏரகரம், கொட்டையூர், ஜாமியாநகர், வலையப்பேட்டை, திருவலஞ்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News