சுவாமிமலை அரசு பள்ளியில் பொது தேர்வை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு

சுவாமிமலை பள்ளியில் அரசு பொது தேர்வை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு

Update: 2022-05-06 05:30 GMT

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறும் சுவாமிமலை அரசு பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்றுவருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு தேர்வு நடைபெறுவதால் மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் தேர்வினை எழுதி வருகிறார்கள்.

இந்நிலையில் சுவாமிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News