தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்தினால் அபராதம் : சுவாமிமலை பேரூராட்சி

தடை செய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்தப்பட்டால் அபராதம் விதிக்கப்படுமென சுவாமிமலை பேரூராட்சி எச்சரித்துள்ளது

Update: 2021-12-27 10:30 GMT

சுவாமிமலை பேரூராட்சி பகுதியில் 01.01.2019 முதல் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் நெகிழிப் பைகள் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் நெகிழி பைகளுக்கு பதிலாக மாற்றுப் பொருட்கள் பயன்படுத்தவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி பிளாஸ்டிக் நெகிழி பைகள் பயன்படுத்தினால் 01.01.2022 முதல் பிளாஸ்டிக் நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதம் விதிக்கப்படும் எனவும் இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறது சுவாமிமலை பேரூராட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News