கும்பகோணம் அருகே தாயை கொலை செய்த மனநலம் பாதித்த மகன் கைது

சில ஆண்டுகளுக்கு முன் நேரிட்ட சாலைவிபத்தில் தலையில் காயமுற்ற இவர் மனநலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது

Update: 2021-09-15 07:15 GMT

கும்பகோணம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகனால் கொலை செய்யப்பட்ட தாய் சரஸ்வதி (70 )

 

தனது  தாயை கொலை செய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகனை  போலீஸார்   கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ரம்யா நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி (70 ). இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவருக்கு ஏழு குழந்தைகளில் ஆறு பேருக்கு திருமணம் ஆகி தனி தனியாக வசித்து வருகின்றனர். இவரது கடைசி மகன் பழனி (36). இவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. மருத்துவ விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். 

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த சாலை விபத்தில், தலையில் பலத்த காயமுற்ற இவர், மனநலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. தாயும், திருமண ஆகாத மகன் பழனியும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றிரவு தாயுக்கும் மகனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது, இதில் ஆத்திரமடைந்த பழனி தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரம் கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தினர், சென்று பார்த்த போது சரஸ்வதி கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பட்டீஸ்வரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் பழனியை கைது செய்தனர். 

Tags:    

Similar News