கும்பகோணம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் : ரூ. 22 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

இந்த ஏலத்தில் கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் 315 குவிண்டால் பருத்தியை எடுத்து வந்தனர்.

Update: 2021-09-01 12:23 GMT

கும்பகோணம் அடுத்த கொட்டையூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தஞ்சாவூர் விற்பனை குழு செயலாளர் சுரேஷ் பாபு தலைமையில், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் பிரிய மாலினி முன்னிலையில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில்,  கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் 315 குவிண்டால் பருத்தியை எடுத்து வந்தனர். இந்த ஏலத்திற்கு பண்ருட்டி, விழுப்புரம், கும்பகோணம், செம்பனார்கோவில், திருப்பூர், குண்டூர் ஆகிய பகுதிகளில் இருந்து 10 வியாபாரிகள் கலந்து கொண்டனர். இந்த பருத்தி தனியார் வியாபாரிகளிடம் இருந்து அதிகபட்சமாக குவிண்டால் ரூ. 7 ஆயிரத்து 709 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக 6 ஆயிரத்து 9 ரூபாய்க்கு, சராசரியாக 7 ஆயிரத்து 250 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த பருத்தி சாராசரியாக 22 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

Tags:    

Similar News