சுவாமிமலை பேரூராட்சி பகுதியில் பறக்கும்படை வாகன சோதனை

சுவாமிமலை பேரூராட்சி பகுதியில் தேர்தல் கண்காணிப்பு பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்

Update: 2022-01-31 17:30 GMT

சுவாமிமலை பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பறக்குப்படையினர் மேற்கொண்ட வாகன சோதனை

சுவாமிமலை பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் காரணத்தால் சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் சுவாமிமலை பைபாஸ் சாலையில் மாலை 4 மணி முதல் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

வெளியூரில் இருந்து வரும் வாகனங்களை முழுமையாக பரிசோதனை செய்த பிறகே சுவாமிமலை பேரூராட்சிக்கு அனுமதிக்கப்பட்டனர். இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஓட்டுனர் உரிமம், வண்டிக்குரிய அனைத்து சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருவதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் காவல்துறையினர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

Tags:    

Similar News