கும்பகோணம் ஜோதிமலையில் மதுரை ஆதீனம் உருவப் படத்துக்கு மலரஞ்சலி

ஜோதிமலைஇறைபணி திருக்கூட்டம்சார்பில் சுந்தரமூர்த்திநாயனார், அவ்வையார்குருபூஜையில் மதுரைஆதீனத்துக்கு அஞ்சலிசெலுத்தினர்

Update: 2021-08-14 11:50 GMT

சைவ சமய திருமுறைகள் 12-இல் 7- ஆம் திருமுறையை அருளிச்செய்து ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் இறைவன் திருவடியை அடைந்தவருமான அருட்திரு சுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூஜை, கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் அலுவலகத்தில் நடந்தது.

இதையொட்டி, அம்பிகையுடன் சிவபெருமான், சைவ சமய ஆச்சாரியர்கள் நால்வரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசக சுவாமிகள் திருவுருவ படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு நடந்தது.

அப்போது சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச்செய்த திருப்பாட்டு என்ற தேவாரப் பதிகங்கள் பாராயணம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.மேலும், திருவடிப்பேறு அடைந்த மதுரை ஆதீனம் 292 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருவுருவப் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆண்டுதோறும் ஆடி சுவாதி திருநாளில் தமிழ் புலவர் அவ்வையாருக்கும் குரு பூஜை நடந்து வருகிறது. மேலக்காவேரி அவ்வையார் தொடக்கப் பள்ளியில் அவ்வையாரின் நீதி நூல் போதனைகளை மாணவர்களுக்கு தெரிவித்து, பழங்கள் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதில், ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News