விபத்தில் தந்தை - மகன் உயிரிழப்பு

Update: 2021-05-07 14:45 GMT

லாரி மோதியதில், தந்தை, மகன் இருவரும் சம்பவ இடத்திலயே பலியாகினர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அரியதிடல் கணபதி நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார்,37,. மர வேலை செய்யும் ஆசாரி. இவரது மகன் பாலச்சந்திரன்,14, இருவரும்  மாலை டி.வி.எஸ்., ஸ்கூட்டரில், சாக்கோட்டை நோக்கி சென்றனர். அப்போது மாத்தி என்ற இடத்தில் செல்லும் போது, முன்னாள் கழிவு நீர் டேங்கர் லாரியை முந்திச் செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரி மோதி, சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்தனர்.இது குறித்து தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டீஸ்வரம் போலீசார் இருவரின் உடலை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News