கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு மாற்றுத் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ரயில் பயண சலுகை பறிப்பை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-08-11 08:49 GMT

ரயில் பயண சலுகை பறிப்பை கண்டித்து  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

கும்பகோணம் ரயில் நிலையம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் வாசுதேவன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சுகுமார், திருபுவனம் கிளை செயலாளர் சேகர், சுபாஷ், வேப்பத்தூர், ராஜேந்திரன், நந்தகுமார், பிரபாகரன், திருப்பனந்தாள் ஏ. எஸ். பாரதி உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், சிறப்பு ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட பெட்டிகளை மூடி வைக்காமல் மீண்டும் திறந்து விடு, ரயில்வே பார்சை கும்பகோணத்தில் முகாமிட்டு உடனே வழங்கிடு, பிளாட்பார்ம் கட்டணம் ரூபாய் 10 லிருந்து ரூபாய் 50 ஆக உயர்த்துவதை உடனே கைவிட வேண்டும், மின்தூக்கி நகரும் படிக்கட்டுகளை ரயில் நிலையங்களில் மீண்டும் இயக்கிட வேண்டும் , பாண்டிச்சேரி, சண்டிகர், யூனியன் பிரதேசங்களில் மாற்றுத்திறனாளிகள் வாகனத்திற்கு பெட்ரோல் மானியம் வழங்குவதை போன்று தமிழகத்திலும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



Tags:    

Similar News