கும்பகோணத்தில் கார் டிரைவர் வெட்டிக் கொலை

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-01 06:00 GMT

கும்பகோணம் அருகே பெருமாண்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் தினேஷ் என்கிற தினகரன் (28). கார் டிரைவர். இவர் நேற்று மதியம் தனது மனைவியிடம் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் கும்பகோணம் பெருமாண்டி பத்மநாதபுரம் பகுதியில் தினகரன் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தினகரனின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தினகரனை வெட்டி கொலை செய்தவர்கள் யார்?, முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News