கும்பகோணத்தில் பஸ் ஏற முயன்ற பள்ளி மாணவன் பலி

கும்பகோணத்தில் பஸ் ஏற முயன்ற மாணவன் தவறி விழுந்ததில் பலியானார்.

Update: 2022-02-28 11:15 GMT

கும்பகோணம் அருகே அரியதிடல் கிராமத்தை சேர்ந்த அமானுல்லா மகன் முகமதுஆதில்(16). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில் காலை பள்ளிக்கு செல்ல, அவ்வழியே கும்பகோணம் நோக்கி வந்த அரசு நகர பஸ்சில் ஓடி சென்று ஏற முயன்றுள்ளார். இதில் நிலை தடுமாறி சாலையில் தவறி விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி, பயணிகளை இறக்கிவிட்டு படுகாயமடைந்த முகமது ஆதிலை பஸ்சில் ஏற்றிக்கொண்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு முகமது ஆதிலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பட்டீஸ்வரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News