கொலை வழக்கில் ஜாமினில் வந்தவர் கொலை: திருவேகம்பத்தூர் போலீசார் விசாரணை

ஒரு கொலை வழக்கில் ராஜாங்கம் 4 -ஆவது குற்றவாளியாக சிறை சென்று தற்போது ஜாமீனில் வந்தபோது கொலை செய்யப்பட்டுள்ளார்

Update: 2021-10-22 10:30 GMT

காரைக்குடி அருகே  கொலை வழக்கில் ஜாமினில் வந்தவர் குத்தி கொலை  செய்யப்பட்ட சம்பவம் குறித்து திருவேகம்பத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் ,தேவகோட்டை அருகே திருமணவயல் கிராமத்தில் உள்ள உணவகத்தில், இரவு சாப்பாடு பார்சல் வாங்குவதற்காக  சிறுவத்தி கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம் (25)என்பவர் வந்துள்ளார் அப்போது அங்கு பாவனக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பிரபு (28), கோட்டூர் கிராமத்தை மணி (25) இவரும், ராஜாங்கத்திடம் தகறாறு செய்துள்ளனர். அப்போது பிரபு , மணி இருவரும் கத்தியால்  குத்தியதில்  ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  கொலை நடந்த இடத்திற்கு  தேவகோட்டை துணை கண்காணிப்பாளர் ரமேஷ்  வந்து விசாரணை நடத்தினார்.  போலீஸார் ராஜாங்கத்தின் உடலை கைப்பற்றி உடல்கூராய்வுக்காக  தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

கடந்த ஜூன் மாதம் தேவகோட்டையில் இருந்து தனது கிராமமான சிறுவத்திக்கு  இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது சிவா என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில்  ராஜாங்கம் 4  -ஆவது குற்றவாளியாக  சிறை சென்று தற்போது ஜாமீனில் வந்த நிலையில், தற்போது கொலை செய்யப்பட்டார்.  ஜாமீனில் வந்தவர் கொலை செய்யப்பட்டது பழிக்கு பழியாக நடந்த கொலையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இந்நிலையில்,  குற்றவாளி கைது செய்ய வேண்டும் உயிரிழந்த குடும்பந்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

Tags:    

Similar News