மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவிப்பு!

மருதுபாண்டியர் சிலைக்கு, மாலை அணிவிப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

Update: 2024-10-24 14:11 GMT

மருதுபாண்டியர் சிலைக்கு, மாலை அணிவிப்பு நிகழ்ச்சி நடந்தது.

மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி 

மருதுபாண்டியர்களின் 223-வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்தில் அன்னார்களின் திருவுருவச் சிலைகள் மற்றும் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள அவர்களின் நினைவுத்தூண் ஆகியவைகளில் அமைச்சர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபத்தில் இன்று (24.10.2024) மருதுபாண்டியர்களின் 223-வது நினைவு தின அரசு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில்,வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் , நிதி மற்றும்  சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி , கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், பால் வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , தொழில்துறை அமைச்சர் டாக்டர். டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து, திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவுத் தூணிற்கு, அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், மருது பாண்டியர்களின் நினைவு மண்டப வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி,மருது பாண்டியர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிரவிக்குமார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி , சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே, தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு.ராஜசெல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News