மதுக்கடைகளை திறக்காவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் : முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி

மதுக்கடைகளை திறக்காவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

Update: 2021-06-14 11:19 GMT

முன்னாள்  மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 

மதுக்கடைகளை திறக்காவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும். காரைக்குடியில் ப சிதம்பரம் பேட்டி அளித்தார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தப் பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறும்போது, 

துரதிர்ஷ்டவசமாக நாடு முழுவதும் மது அருந்தும் பழக்கம் பரவிவிட்டது. தமிழ்நாடு அதற்கு விலக்கல்ல. பல இடங்களில் சில பெண்கள் கூட மது அருந்துகிறார்கள்.  நான் மது அருந்துவது கிடையாது.  அதனால் மது அருந்துபவர்களை தீயவர்கள் என்றும் சொல்ல முடியாது. மதுக்கடைகள் இல்லை என்றால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்.

இதனை யாரும் மறுக்க முடியாது.  கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டுமென்றால் மதுக்கடைகளை திறந்துதான் ஆக வேண்டும். நாடு முழுவதும் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் H.ராஜா சென்று மதுக்கடைகளை மூட சொல்லி பிரச்சாரம் செய்ய வேண்டும்.  அதன் பின்பு தமிழகத்தில் மதுக்கடைகளை மூட சொல்லலாம். கட்டுமான பொருட்கள் விலை ஏற்றத்திற்கு காரணமே பெட்ரோல் டீசல் விலை ஏற்றம்தான். பெட்ரோல் டீசல் விலை குறைந்தால் கட்டுமான பொருட்களின் விலையும் குறைந்து விடும். இவ்வாறு அவர்  கூறினார்.

Tags:    

Similar News