உதகை கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு

மாவட்டத்தில் காலனி என்ற ஊர் பெயர்களை மாற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியினர் மனு.

Update: 2022-03-14 07:15 GMT

கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த நாம் தமிழர் கட்சியினர். 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள காலனி என்ற பெயரை மாற்ற வேண்டும் என நீலகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அதில், காலனி என்கிற பெயர் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் என அழைக்கப்படுகிறது. இப்படி அழைப்பது சரியானதல்ல. தமிழுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த முன்னோர்களின் பெயரை பறைசாற்றும் என்ற வகையில் அவர்களின் பெயரை,  ஊர்களின் பெயரை மாற்றி,  நகர் அல்லது ஊர்களுக்கு வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் நாம் தமிழர் கட்சி மூலம் மக்களை திரட்டி மாவட்ட அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News