ஊட்டியில் உறைபனி, பொதுமக்கள் அவதி

ஊட்டியில் குறைந்த பட்ச வெப்பநிலை, 0.8 டிகிரி செல்சியசை நெருங்கியதால் கடும் குளிர் வாட்டுகிறது

Update: 2024-01-30 04:33 GMT

ஊட்டி உறைபனி

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நவம்பர் மாதம் துவங்கும் உறைபனி, ஜன., மாதம் இறுதி வரை நிலவும். கடந்த ஆண்டு சீதோஷ்ண நிலை மாறுபாடு காரணமாக, பனி காலம் தாமதமானது.

கடந்த டிசம்பர்  24ம் தேதி தென்பட்ட உறை பனிக்கு, குறைந்த பட்ச வெப்பநிலை, 4 டிகிரி செல்சியசாக பதிவானது. பின், கடும் மேகமூட்டம், மழையால் உறை பனி தென்படவில்லை. அவ்வப்போது நீர் பனி மட்டும் தென்பட்டது.

கடந்த இரு வாரமாக உறை பனி பொழிவு அதிகரித்து, குறைந்த பட்ச வெப்பநிலை, 2 டிகிரி செல்சியஸ் பதிவானது.

இந்நிலையில் நேற்று ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை, 23 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்ச வெப்பநிலை, 0.8 டிகிரி செல்சியசாக பதிவானது.

தலைகுந்தா, காந்தள், அவலாஞ்சி, வேலிவியூ போன்ற பகுதிகளில், குறைந்த பட்ச வெப்பநிலை 'மைனஸ்' டிகிரியை தொட வாய்ப்புள்ளது. இதனால், இரவு மற்றும் அதிகாலையில் கடும் குளிர் நிலவுகிறது.மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படடுள்ளது.

தோட்டக்கலை உதவி இயக்குனர் பால சங்கர் கூறுகையில், ''கடந்த இரு வாரமாக குறைந்த பட்ச வெப்பநிலை, 2 டிகிரி செல்சியசாக தொடர்ந்த நிலையில், நேற்று, 0.8 டிகிரி செல்சியல் வெப்பநிலை பதிவானது. புறநகர் பகுதியில் இதை விட வெப்பநிலை குறைந்திருக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.

Tags:    

Similar News