எருமப்பட்டி பகுதியில் 15ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம்

எருமப்பட்டி பகுதியில் 15ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.;

Update: 2022-06-13 10:00 GMT

பைல் படம்.

எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் 15ம் தேதி மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளதாவது:

எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் வரும் 15ம் தேதி புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நலவடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, பொன்னேரி, நா.புதுக்கோட்டை, கோணாங்கிப்பட்டி, காவக்காரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News