ராசிபுரத்தில் 120 மதுபாட்டில்களை கடத்திய 2 வாலிபர்கள் கைது

ராசிபுரத்தில் மோட்டார் சைக்கிளில் 120 மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-03 02:45 GMT

ராசிபுரம் அருகே உள்ள சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில், ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டினர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது, அவர்கள் மோட்டார் சைக்கிளில் 120 மதுபாட்டில்களை வைத்து கடத்திச்சென்றது தெரியவந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் ராசிபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (20), விக்னேஷ்வரன் (21) என்பதும், அவர்கள் திருச்சி மாவட்டம் துறையூர் தாத்தையங்கார்பேட்டை பகுதியில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News