பரமத்தி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

பரமத்தி அருகே பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-10-25 02:45 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள காளிபாளையத்தை சேர்ந்தவர் பழனி, கூலி தொழிலாளி. இவரது மனைவி வீராயி ( 55). இவர் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நோய் குணமடையாததால், அவர் விரக்தியடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீராயி வீட்டிற்குள் சேலையால்  தூக்கப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த அவரது இளைய மகன் கார்த்திகேயன் பரமத்தி போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி போலீசார் வீராயின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News