பரமத்திவேலூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து ஒருவர் பலி

பரமத்திவேலூர் அருகே மின்சாரம் தாக்கி ஆந்திர மாநில தொழிலாளி உயிரிழந்தார்.;

Update: 2021-06-29 03:00 GMT
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலிபரமத்திவேலூர் அருகே மின்கம்பி அறுந்து விழுந்து ஒருவர் பலி
  • whatsapp icon

ஆந்திர மாநிலம், கங்காபுரம் பகுதி பனசபத்திராவைச் சேர்ந்தவர் மந்தாகி ராமாராவ் (37). இவரது மனைவி சுஜாதா (23). இவர்களது மகன் சிந்து (4). இவர்கள் அனைவரும் தற்போது குடும்பத்துடன் கபிலர்மலை அருகே உள்ள இருக்கூரில் தங்கி வசித்து வந்தனர். மந்தாகி ராமாராவ் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் காகித ஆலையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மாலை அவர் தண்ணீர்த் தொட்டிக்கு குளிக்க சென்றார். அப்போது அருகே இருந்த மின் கம்பத்தின், மின் கம்பி அறுந்து மந்தாகி ராமாராவ் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கியதால் அவர் அதே இடத்தில் உடல் கருகி உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீசார் மந்தாகி ராமாராவ் உடலை மீட்டு ப.வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News