ப.வேலூர் விற்பனைக் கூடத்தில் ரூ.2.15 லட்சத்திற்கு தேங்காய் ஏலம்

ப.வேலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.15 லட்சம் மதிப்பில் தேங்காய் ஏலம் போனது.

Update: 2022-05-04 02:15 GMT

பரமத்திவேலூரில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 5,851 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ரூ27.85 -க்கும், குறைந்த பட்சமாக ரூ.20.99 -க்கும், சராசரியாக ரூ.26.50-க்கும் ஏலம் போனது.

மொத்தம் ரூ.1,54,789க்கு வர்த்தகம் நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 8,428 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். ஏலத்தில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.27.25-க்கும், குறைந்தபட்சமாக ரூ20- க்கும், சராசரியாக ரூ.26.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.2,15,406-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

Tags:    

Similar News