குமாரபாளையத்தில் யோகாசன கின்னஸ் சாதனை நிகழ்ச்சி

குமாரபாளையத்தில் யோகாசன கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-02-06 08:18 GMT

குமாரபாளையத்தில் யோகாசன கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

குமாரபாளையத்தில் யோகாசன கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தமிழ்நாடு யோகா கூட்டமைப்பின் சார்பில் உலக சாதனை யோகா போட்டி நடத்தபட்டது. பொது செயலர் அரவிந்தன், போட்டி ஒருங்கிணைப்பாளர் மதுமிதா தலைமை வகித்தனர்.

நாமக்கல், ஈரோடு, சேலம், கோவை, திருநெல்வேலி, கடலூர், சென்னை உள்ளிட்ட பல பகுதியிலிருந்து, மூன்று வயதிலிருந்து, 30 வயது வரையிலான 300 நபர்கள் பங்கேற்றனர். ஒரே இடத்தில் வட்டையாசனம் எனப்படும் யோகாசனம் தொடர்ந்து 5 நிமிடங்கள் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

நோபிள் வோர்ல்டு ரெக்கார்டு அமைப்பினர் இதனை அங்கீகரித்தனர். தேசிய அளவில் யோகாவில் தங்கப்பதக்கம் வென்ற போட்டி ஒருங்கிணைப்பாளர் மதுமிதாவிற்கு சிறந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விருது வழங்கப்பட்டது.

Tags:    

Similar News