பா.ம.க. நிர்வாகி குறித்து அவதூறு: நடவடிக்கை எடுக்க காவல் நிலையத்தில் மனு

பா.ம.க. நிர்வாகி குறித்து அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குமாரபாளையம் காவல் நிலையத்தில் மனு கொடுக்கப்பட்டது.

Update: 2023-03-27 15:45 GMT

பா.ம.க. நிர்வாகி குறித்து அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குமாரபாளையம் போலீசில் மனு பா.ம.க.வினர் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பா.ம.க. நகர செயலராக இருப்பவர் சுதாகர். இவர் மீது தவறான கருத்துக்களை இழிவு படுத்தும் நோக்கத்துடன் பிரபு என்பவர் மொபைல் போன் மூலம் பரப்பி வருவதாக கூறப்படுகிறது. இதனால் பிரபு மீது நடவடிக்கை எடுக்க வேண்டி பா.ம.க. நிர்வாகிகள் குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து மாவட்ட இளைஞர் அணி துணை செயலர் கார்த்தி கூறுகையில், பா.ம.க. கட்சி மீதும், நிர்வாகிகள் மீதும் பிரபு என்பவர் அவதூறு பரப்பி வருகிறார். இது பா.ம.க. கட்சி மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ள எங்களைப் போன்ற ஏராளமானோருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது. அதனால் அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் நிர்வாகிகள் செந்தில், சுப்பிரமணி, சிவராமன், ஜெகந்நாதன், செல்லமுத்து, தங்கராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News