தினசரி காய்கறி மார்க்கெட் கட்டுமானப் பணி: நகராட்சி சேர்மன் ஆய்வு

குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டுமான பணிகளை நகராட்சி சேர்மன் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2023-03-13 12:00 GMT

குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த நகராட்சி சேர்மன் ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி சார்பில் இடைப்பாடி சாலையில் ஜி.ஹெச். அருகே தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இந்த மார்க்கெட் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், கட்டிடங்கள் மிகவும் சேதமாயின.

தற்போது இதனை புதுப்பிக்கும் பணி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.278.24 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்காலிகமாக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மார்க்கெட் செயல்பட்டு வருவதால், பேருந்துகள் வந்து செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், மார்க்கெட் கட்டுமான பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்து, பணிகள் விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.

இதில் மார்க்கெட் சங்க தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் ராஜ், நிர்வாகிகள் செந்தில்குமார், ஆனந்தன், உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News