சாலையில் தேங்கிய மழைநீர்- மீன்பிடித்து நூதன போராட்டம்

Update: 2021-01-13 07:00 GMT

சீர்காழி அருகே சாலையில் தேங்கிய மழைநீரில் மீன்பிடித்து நூதன போராட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் கிராமத்தில் திருமுல்லைவாசல், பழையார் செல்லும் சாலையில் பெய்த மழையால் சாலையில் மழைநீர் தேங்கி வடிவதற்கு வழியின்றி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் அவ்வழியே வாகனங்கள் செல்லும் போது சாலையோரம் வீடுகளின் உள்ளே தண்ணீர் புகுந்து கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் மழை நீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் விதமாக அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பாஜகவினர் தேங்கிய மழைநீரில் வலையை விரித்து மீன்பிடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News