நாகை அருகே அக்கரப்பேட்டையில் ராட்சத எந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சியில் ராட்சத எந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

Update: 2021-05-22 11:06 GMT

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சியில் ராட்சத எந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா நோய் நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்த நிலையில் 585 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 22 ஆயிரத்து 402 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதால் தடுப்பு பணிகளில் சுகாதாரத் துறை உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அக்கரைப்பேட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அழியாநிதி மனோகரன் தலைமையில் ராட்சச இயந்திரம் கொண்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் , அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், திடீர்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்கள், வீடுகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் ஊராட்சியின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீரும் வழங்கப்பட்டது. 

Tags:    

Similar News