சூளகிரி அருகே லாரி கண்ணாடி உடைப்பு: ஆம்னி பேருந்து டிரைவர் மீது போலிஸில் புகார்

சூளகிரி அருகே முந்திச்செல்வதில் ஏற்பட்ட தகராறில் லாரியின் கண்ணாடியை உடைத்த ஆம்னி பேருந்து டிரைவர் மீது போலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-12-11 15:16 GMT

கண்ணாடி உடைக்கப்பட்ட கண்டெய்னர் லாரி.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் லாரியை முந்தி செல்வதில் ஏற்ப்பட்ட பிரச்சனையில் லாரி டிரைவரை திட்டி கண்ணாடியை சேதப்படுத்திய தனியார் ஆம்னி பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லாரி டிரைவர் சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் லாரி டிரைவர். இவர் கண்டையனர் லாரி மூலம் சரக்கு ஏற்றுவதற்காக ஓசூரில் உள்ள இருசக்கர வாகனம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு வந்துள்ளார்.

இன்று மதியம் சூளகிரி அருகே அழகு பாவி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, ஆம்னி பேருந்து பெங்களூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

அப்போது வாகனம் முந்திச் செல்வதில் ஏற்பட்ட பிரச்சனையில் சுவராஜ் என்ற நிறுவனத்தின் ஆம்னி பேருந்து டிரைவர் லாரி அருகே நிறுத்தி லாரி டிரைவர் சண்முகத்தை தகாத வார்த்தையால் திட்டி கல்லால் தாக்கி கண்ணாடிகளை உடைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து பேருந்தை பெங்களூர் நோக்கி எடுத்துசென்று விட்டார்.

இது குறித்து லாரி டிரைவர் சண்முகம், சூளகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆம்னி பேருந்து டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News