மழையால் சேதமடைந்த நெற்கதிர்கள் அரசு உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை
சூளகிரி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் மழையினால் சேதமடைந்துள்ளதால் உரிய நிவாரணம் வழங்க விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.;
மழையால் சேதமடைந்த நெற்பயிர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சின்ன தின்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன் விவசாயி. இவர் இந்த வருடம் நன்றாக மழை பெய்த காரணத்தினால் 9 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ளார்.
தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் கன மழை பெய்ததால் நெல் வயலில் கதிர்கள் முழுவதும் சாய்ந்து மடிந்தது. இதனால் அறுவடை செய்ய முடியாத சூழ்நிலையில் நெல் மணிகள் அனைத்தும் வயலிலேயே முளைக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயி நரசிம்மன் கூறுகையில், சுமார் ரூ.3 லட்சம் வரை செலவு செய்து தற்போது பத்துப் பன்னிரண்டு லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே அரசு அதிகாரிகள் இதனை ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.