உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை பகுதிகளில் 3 வீடுகளில் 12 பவுன் நகை திருட்டு

உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை பகுதிகளில் 3 வீடுகளில் மர்ம நபர்கள் 12 பவுன் நகையை திருடி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-11-14 07:06 GMT

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள நஞ்சானட்டி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பன் (வயது 40.) கூலித்தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகையை திருடி சென்றனர்.

அதேபோல் அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா (48.) இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டாமல் வெளிப்புறமாக தாழிட்டு விட்டு மாடு மேய்க்க சென்றார். திரும்பி வந்து பார்த்த போது கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 2 பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. இது தொடர்பாக அவர்கள் 2 பேரும் உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ராயக்கோட்டை அருகே உள்ள நல்லராலம்பள்ளியை சேர்ந்தவர் முனியப்பா (70). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவருடைய வீட்டின் பீரோவில் இருந்த 3 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தினார்கள். உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை பகுதிகளில் 3 வீடுகளில் நகை திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News