வேப்பணப்பள்ளியில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் கடும் அவதி

வேப்பணப்பள்ளியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

Update: 2021-11-22 06:04 GMT

வேப்பணப்பள்ளியில் ஏற்பட்ட பனி மூட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பணப்பள்ளியில் அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு, இதன் காரணமாக நெடுஞ்சாலை செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு படி சென்றது.

பனிப்பொழிவானது அருகில் செல்லும் வாகனங்கள் கூட தென் படாதவாறு கடும் பனிப்பொழிவு, கடுமையான குளிரும் காணப்பட்டது.

இதன் காரணமாக வாகனங்கள் மெதுவாகச் ஊர்ந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இந்த பனியின் தாக்கம் காலை 8 மணி வரை நீடித்ததால், தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள், பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags:    

Similar News