கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளப்பள்ளியில் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

Update: 2021-05-29 05:00 GMT

கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளப்பள்ளியில் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி அடுத்த பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இது குறித்து பெத்ததாளப்பள்ளி பஞ்சாயத்து அலுவலர்கள் கூறுகையில், பெத்ததாளப்பள்ளி பஞ்சாயத்தில் முதல் கட்டமாக கிருமி நாசினி அடிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது கட்டமாக கடந்த 24ம் தேதி பாஞ்சாலியூர், ஆர்.பூசாரிப்பட்டி, அண்ணா நகர், அன்னையன் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி அடிக்கப்பட்டது.

தற்போது ராஜீவ்காந்தி நகர், தின்னகழனி, வட்டுகம்பட்டி கூட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி அடிக்கப்பட்டது. பஞ்சாயத்து தலைவி அம்சவள்ளி வெங்கடேசன் தலைமையில், பஞ்சாயத்து அலுவலர்கள் உள்பட 7 பேர் இப்பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகள் தோறும் கிருமி நாசினி அடித்தனர்.

நாளொன்றுக்கு 5 ஆயிரம் லிட்டர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாகவும், கொரோனா தொற்று பரவல் தற்போது குறைந்து வரும் நிலையில், அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை பொதுமக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், பஞ்சாயத்து முழுவதும் வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது என்று கூறினர்


.

Tags:    

Similar News