வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் சமூக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் சமூக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி இன்று நடந்தது.

Update: 2021-09-22 14:45 GMT

வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் நடந்த சமூக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி வழிகாட்டுதலின்படி, வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் மூலம் சமூக விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி 7 நாட்கள் நடைபெற உள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சி வேப்பனஹள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட சென்னசந்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் நாராயணா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இளமைத் திருமணம், கல்வியின் அவசியம் மற்றும் கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வயது வந்தோர் கல்வி, குட் டச், பேட் டச் மூலம் மாணவிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக 1098 எண்ணை பயன்படுத்துதல் ஆகிய கருத்துகளை மையமாகக் கொண்டு ஆடல், பாடல், கதைகள் மற்றும் தப்பாட்டம் மூலம் சமுதாய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

முதல் நாளான நேற்று சென்னசந்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி, வேப்பனஹள்ளி மகளிர் மேல்நிலைப்பள்ளி, தீர்த்தம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் இந்த கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் 400க்கும் மேற்பட்ட மராணவ, மாணவிகள், 150க்கும் அதிகமான பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News