நிலத்தகராறில் மோதல் : இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு

மத்தூர் அருகே நிலத்தகராறில் மோதிக் கொண்டதில்இரு தரப்பினர்மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

Update: 2021-03-20 08:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த மலையாண்டஹல்லி பகுதியைச் சேர்ந்தவர் வேடியம்மாள்.  இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலுமணி என்பவருக்கும் நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று மலையாண்டஹள்ளி பகுதியில் உள்ள வேடியம்மாள் வீட்டிற்கு சென்ற வேலுமணி மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோர், வேடியம்மாளை ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும்  அவரை   தாக்கி மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.

இதனால், வேடியம்மாள் மத்தூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மத்தூர் போலீஸ் எஸ்.ஐ கோவிந்தராஜன் வேலுமணி மற்றும் கீதா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அதேபோல் கீதா கொடுத்த புகாரின் பேரில் வேடியம்மாள் மற்றும் அவரது கணவர் தண்டபாணி மீதும்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News