மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம் செய்து கர்ப்பம்: மர்ம ஆசாமிக்கு வலை
ஊத்தங்கரை அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த நபரை, போலீசார் தேடி வருகிறார்கள்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவிற்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 28 வயது பெண். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். மேலும் மாற்றுத்திறனாளி ஆவார். இவர் வழக்கமாக ஆடுகளை மேய்க்க செல்வது வழக்கம்.
கடந்த 5 மாதத்திற்கு முன்பு இவர் ஆடுகளை மேய்க்க சென்ற போது மர்மநபர், இவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் இவரது உடல் நிலையில் மாற்றம் ஏற்படுவதை அறிந்த பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். இதில், அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து, அந்த பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்.