கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1584 மதுபாட்டில்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,584 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-08 13:17 GMT

பர்கூர் அருகே, கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 1,584 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், திருப்பத்தூர் கூட்ரோடு பகுதியில் போலீஸ் எஸ்ஐ சங்கர் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்த ஒரு மாருதி கார் டிரைவர், சாலையோரம் காரை நிறுத்திவிட்டு, இறங்கி தலைமறைவானார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த காரை சோதனை செய்தனர். அதில் 33 பெட்டிகளில் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான 1,584 மதுபாட்டில்கள் இருந்ததும், அந்த மதுபாட்டில்கள் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து மதுபாட்டில்களுடன் காரை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News