கரூரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மருத்துவ முகாம்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மருத்துவமுகாம் நடைபெற்றது.

Update: 2021-05-19 04:51 GMT

 மக்கள் நீதி மையம் சார்பில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்  நடைபெற்றது அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட முகம்மது ஹனீஸ் சகில் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 இதில் மருத்துவர் தமீமுல் அன்சாரி பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவைகளை பரிசோதனை மேற்கொண்டார். தேவைப்படும் நபர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் கபசுர குடிநீர் பொடி இலவசமாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News