குமரியில் சாெத்து வரி உயர்வை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உள்ளிட்ட வரியை உயர்த்திய திமுக அரசை கண்டித்து குமரியில் பாஜக ஆர்ப்பாட்டம்.

Update: 2022-04-20 11:45 GMT

குழித்துறை நகராட்சி அலுவலகம் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் தமிழக அரசு சொத்துவரி, வீட்டுவரி மற்றும் காலிமனை வரிகளை உயர்த்தி அறிவித்துள்ளது, இதற்கு பாஜக, அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

மேலும் இந்த முடிவை அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர், மேலும் இந்த வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் முன்னால் உயர்த்தப்பட்ட வரியை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்ட போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக குழித்துறை நகராட்சி அலுவலகம் முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News